அந்தியூர்:தாய் மாமா துக்க நிகழ்வில், முதல்வர் பழனிசாமி., பங்கேற்றார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பகவுண்டர், 98. இவர் தமிழக முதல்வரின் தாயார் தவுசாயம்மாளின், உடன் பிறந்த சகோதரர். முதல்வர் தாய் மாமனும், அந்தியூர் முன்னாள் ஒன்றிய செயலாளர், கே.பி.எஸ்.,ராஜாவின் தந்தையுமான கருப்பகவுண்டர், வயது முதிர்ச்சி காரணமாக கடந்த, 30ல், இறந்தார்.
இதையடுத்து, துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, நேற்று காலை முதல்வர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, மைக்கேல்பாளையத்திற்கு காலை, 9:42 மணிக்கு வந்தார். தாய்மாமா வீட்டில், துக்கம் விசாரித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின், அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE