சூலூர் : அரசூர் சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முகுந்தன்,26. சிவில் இன்ஜினியர். இவர், நீலம்பூர் - கரையாம்பாளையம் ரோட்டில் உள்ள மளிகை கடையில் பொருட்கள் வாங்கி கொண்டிருந்தார். அப்போது அவரது பைக்கில் இருந்த மொபைல்போனை, இரு நபர்கள் திருடிக்கொண்டு தப்ப முயன்றனர். அருகில் இருந்தவர்கள், இருவரையும் துரத்தி சென்று பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.விசாரணையில் இருவரும், கோவை, தொட்டி பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, 37 மற்றும் தினேஷ், 35 என்பது தெரிந்தது. போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE