அன்னுார் : அன்னுார் தாலுகாவில், ரேஷன் கடைகளில் கொண்டைக்கடலை 45 சதவீதம் கார்டுதாரர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என்பதால் மற்றவர்கள் ஏமாற்றமடைந்தனர்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை, மக்களுக்கு ஜூலை மாதம் முதல், மாதம் ஒரு கிலோ கொண்டைக்கடலை வழங்க மத்திய அரசு அறிவுறுத்தியது. அன்னுார் தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் நேற்று கொண்டைக்கடலை வினியோகம் துவங்கியது.முன்னுரிமை பெற்ற ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் அந்தியோதயா கார்டுதாரர்களுக்கு மட்டும் தலா ஐந்து கிலோ கொண்டைக்கடலை வழங்கப்பட்டது. கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க., வினர் ரேஷன் கடைகளில் வினியோகத்தை துவக்கி வைத்தனர்.அன்னுார் தாலுகாவில், 54 ஆயிரத்து 364 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர்.
இதில், 25 ஆயிரத்து 116 கார்டுதாரர்கள் மட்டும் கொண்டைக்கடலை பெற தகுதியுள்ளவர்கள் என வட்ட வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் ரேஷன் கடைக்கு வந்த இதர ரேஷன் கார்டுதாரர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE