கிணத்துக்கடவு : சர்வீஸ் ரோட்டில், மண், கற்களை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.
கிணத்துக்கடவில் மழை பெய்யும் போது, மேம்பாலத்தில் இருந்து வரும், தண்ணீர் குழாய் வழியாக 'சென்டர் மீடியன்' பகுதியில் விழுந்து, ரோட்டில் செல்கிறது. அப்போது, சென்டர் மீடியனில் உள்ள மண், ரோட்டில் பரவியது.சர்வீஸ் ரோடு வழியாக வரும் வாகனங்கள், மண் பரவியுள்ள பகுதியில் செல்லும் போது சறுக்கி விழுந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் இருந்தது.மேலும், லோடு ஏற்றி வரும் வாகனங்கள், நிலை குலைந்து இரும்பு தடுப்பில் மோதி பெரும் விபத்து ஏற்படும் என்பதால், தேசிய நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள், சர்வீஸ் ரோட்டில் படிந்துள்ள மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE