சூலூர் : -கிராம வளர்ச்சி திட்டம் தயாரிக்க, ஊரக வளர்ச்சி துறையினருடன் மற்ற துறையினருக்கு இன்று பயிற்சியளிக்கப்படுகிறது.
நடப்பு 2020--21ஆம் ஆண்டுக்கான கிராம வளர்ச்சி திட்டங்கள் தயாரிக்கும் வகையில், மாநில அரசுகளுடன் சேர்ந்து மத்திய அரசு பிரசார இயக்கத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. கடந்த அக்.,2 ல் துவங்கிய இந்த பிரசாரம், ஜன., 31ம் தேதி நிறைவு பெறுகிறது.கிராம வளர்ச்சி திட்டம், அந்தந்த கிராம ஊராட்சியின் எல்லைக்குட்பட்டு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக நீதியை அடிப்படையாக கொண்டு வகுக்கப்பட வேண்டும். இதற்கென சிறப்பு கிராம சபை கூட்டங்கள் மற்றும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இரண்டு கட்டமாக கிராமத்தில் உள்ள முன்களப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கிராம வளர்ச்சி திட்டம், வட்டார ஊராட்சி வளர்ச்சி திட்டம் மற்றும் மாவட்ட ஊராட்சி வளர்ச்சி திட்டங்கள் தயாரிப்பதற்கான வழிகாட்டி நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. வட்டார அளவில் ஊரக வளர்ச்சி அலுவலர்கள், வருவாய், வேளாண் மற்றும் இதர துறை அலுவலர்கள் பங்கேற்கும் இணைய வழி பயிற்சி முகாம் இன்று சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடக்கிறது. பவானிசாகரில் உள்ள மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE