உடுமலை : உடுமலையில், வணிக நிறுவனங்களில், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், கொரோனா பரவல் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதோடு, விதி முறைகள் கண்காணிப்பு மற்றும் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறைந்துள்ளதாகவும், உரிய கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும், என திருப்பூர் மாவட்ட சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டது. இதனை அடுத்து, நேற்று முதல் மீண்டும், ஆய்வுப்பணிகள் தீவிரமடைந்துள்ளது. நேற்று, உடுமலை நகராட்சி நகர் நல அலுவலர் கவுரி சரவணன் தலைமையிலான சுகாதாரத்துறை அதிகாரிகள், உடுமலை வ.உ.சி., வீதி, சீனிவாசா வீதி உள்ளிட்ட பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், வணிக நிறுவனங்களிலுள்ள பணியாளர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்தது, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது ஆகிய காரணங்களுக்காக, 12 கடைகளுக்கு, 5,500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா பரவல் குறைந்து வந்தாலும், மழை காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நோய்த்தொற்று பரவலை தடுக்க, அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். வணிக நிறுவனங்களில், பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடை பிடிக்க வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீண்டும், பிரதான ரோடுகள், கடை வீதிகளில் ஆய்வு பணி தீவிரப்படுத்தப்படும்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE