சூலூர் : சுல்தான்பேட்டை ஒன்றியத்தில், 10 ஆயிரம் குடும்பங்களுக்கு, கொரோனா தடுப்பு மருந்துகள் வினியோகிக்க ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
சுல்தான்பேட்டை ஒன்றிய குழு கூட்டம், சேர்மன் ரத்தினம் தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் குழந்தைசாமி, ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர். எம்.எல்.ஏ., கந்தசாமி, ஒன்றியத்தில் நடக்கும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேட்டறிந்தார். வரவு - செலவு கணக்கு வாசிக்கப்பட்டது. ஒன்றியத்தில் உள்ள பழுதடைந்த கட்டடங்களை ஆய்வு செய்து இடிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
ஒன்றியத்தில் உள்ள, 20 ஊராட்சிகளில், 10 ஆயிரம் குடும்பங்களுக்கு தமிழக அரசின் கொரோனா தடுப்பு மருந்து தொகுப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. மேலும், வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஊராட்சிகளில் நடக்கும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒன்றிய கவுன்சிலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார் நன்றி கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE