கோவை : திருமண ஆசை காட்டி மாணவியை கடத்தி சென்ற வாலிபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை, சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதுாரிலுள்ள ஒரு மில்லில் தொழிலாளியாக பணியாற்றி வருபவர் நாகராஜன்,22. அதே மில்லில் பணியாற்றும் ஒருவர், அங்குள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார். அவருடைய 14 மற்றும் 12 வயதுடைய மகள்கள், அங்குள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். 14 வயதுள்ள மாணவியிடம், நாகராஜன் நெருங்கி பழகினார். திருமணம் செய்து கொள்வதாக கூறி ஆசை காட்டி, மாணவியை கடத்தி சென்றார். மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE