ஸ்ரீவில்லிபுத்துார்:சென்னையில் நடந்த கவுன்சிலிங்கில் அரசுப்பணி பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய சங்கரன்கோவில் மனிஷாஸ்ரீ 23, ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலியானார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதியார் தெரு குருநாதன்-சாந்தி தம்பதியின் மகள் மனிஷாஸ்ரீ. பி.ஏ., ஆங்கிலம் படித்த இவர் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றார். நவ.30ல் சென்னையில் நடந்த கவுன்சிலிங்கில் பங்கேற்று மருத்துவத்துறையில் பணி ஒதுக்கீடு பெற்றார்.நேற்று முன்தினம் இரவு சென்னையிலிருந்து பொதிகை சிறப்பு ரயிலில் தந்தை குருநாதன், சகோதரியின் கணவர் அய்யனாருடன் சங்கரன்கோவில் புறப்பட்டார்.
நேற்று காலை 6:15 மணிக்குசிவகாசி-ஸ்ரீவில்லிபுத்துார் இடையே கோப்பநாயக்கன்பட்டி அருகே ரயில் வரும்போது மனிஷாஸ்ரீ தவறி விழுந்து பலியானார்.இதையறியாத குருநாதன், அய்யனார் சங்கரன்கோயில் ஸ்டேஷன் வரும்போதுமனிஷாஸ்ரீ காணாதது குறித்து ஸ்ரீவில்லிபுத்துார் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விசாரணையில் மனிஷாஸ்ரீ ரயிலிலிருந்து தவறி விழுந்து இறந்தது தெரியவந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE