ராணிப்பேட்டை:சொத்துக்காக, 3 வயது சிறுமியை, கிணற்றில் வீசி கொலை செய்த சித்தியை, போலீசார் கைது செய்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம், செட்டித்தாங்கலை சேர்ந்தவர் காந்தி, 45; கட்டட தொழிலாளி. இவரது மனைவி, ராஜேஸ்வரி, 42; மகன், தனுஷ், 13; மகள் கோபிகா, 3.கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், சவுதி அரேபியாவில் கட்டட பணிக்கு, காந்தி சென்ற போது, அங்கு பணியாற்றிய, இலங்கையைச் சேர்ந்த புஷ்பராணி, 36, என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
பின், சொந்த ஊருக்கு வந்தபோது, அவரை தன் வீட்டுக்கு அருகே குடித்தனம் வைத்தார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.காந்தி, சவுதி அரேபியாவில் சம்பாதித்த பணத்தில், ராணிப்பேட்டையில், 5 கோடி ரூபாய் மதிப்புள்ள, 10 ஏக்கர் நிலம், ஐந்து வீடுகள் வாங்கினார். சொத்தை பிரித்து எழுதியதில், ராஜேஸ்வரிக்கும், புஷ்பராணிக்கும் தகராறு இருந்து வந்தது.நவ., 30ம் தேதி மதியம், 1:00 மணிக்கு, வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ராஜேஸ்வரியின் குழந்தை கோபிகா மாயமானார்.
ராணிப்பேட்டை போலீசில் காந்தி புகார் செய்தார். போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில், குழந்தையை புஷ்பராணி துாக்கிச் சென்றது தெரிந்தது.அவரிடம் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்னையில், கோபிகாவை அருகிலிருந்த கிணற்றில் வீசி கொலை செய்தது தெரிந்தது.நேற்று முன்தினம் இரவு, 10மணிக்கு, ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர், கிணற்றில் இருந்து கோபிகாவின் சடலத்தை மீட்டனர். புஷ்பராணியை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE