சிவகங்கை:சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் 4வது முறையாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
டிச., 11 ல் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை மாவட்ட ஊராட்சியில் 16 வார்டுகள் உள்ளன. 8ல் அ.தி.மு.க., 6ல் தி.மு.க., 2ல் காங்., வெற்றி பெற்றுள்ளது.அ.தி.மு.க., தி.மு.க. கூட்டணி சமபலத்தில் இருப்பதால் தலைவர் தேர்தல் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.போதுமான உறுப்பினர்கள் தேர்தல் நேரத்தில் வராததால் 3 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
தி.மு.க., கூட்டணியினர் தேர்தலை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். 15 நாளில் தேர்தல் நடத்த கோர்ட் உத்தரவிட்டது. டிச.,4ல் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.புரெவி புயல், மழை எச்சரிக்கை மற்றும் டிச.4ல் முதல்வர் தலைமையிலான கொரோனா ஆய்வு கூட்டம் இருப்பதால் தேர்தலில் கலெக்டர் கவனம் செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர் தேர்தல் 4வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிச.11ல் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE