துாத்துக்குடி:கழுகுமலை அருகே கண்மாயில் குளித்த சுகேஷ் 9, நீரில் மூழ்கி பலியானான். இருவர் மீட்கப்பட்டனர்.
துாத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கரடிகுளம், சின்னகாலனியை சேர்ந்த செல்லபெருமாள் மகன் சுகேஷ். உடைகுளம் கண்மாயில் நண்பர்களுடன் குளிக்கச்சென்றார். மூவரும் நீரில் மூழ்கினர். ஆடு மேய்ப்பவர்கள் சிறுவர்களை மீட்டனர். இருப்பினும் சிகிச்சைக்கு செல்லும் வழியில் சுகேஷ் இறந்தார். அவருடன் குளித்த கரன் 9, சிவசங்கர் 9 ஆகியோர் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கழுகுமலை போலீசார் விசாரித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE