கோவை : மேட்டுப்பாளையம் சுவர் இடிந்த விபத்தில், தேவையான உதவிகளை செய்த அமைப்புக்கு, ஊர்மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இது தொடர்பாக, மேட்டுப்பாளையம், நடூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:நடூரில் சுவர் இடிந்து விழுந்த இடத்தில், தமிழ்நாடு அக்னிவீர் அமைப்பினர் இன்று(நேற்று) காலை, 6:30 மணியளவில், ஊர்மக்களுடன் சேர்ந்து மோக் ஷ தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.சுவர் இடிந்து விழுந்த நாளில் இருந்து, தற்போது வரை அவர்கள் தொடர்ந்து எங்கள் ஊருக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். குறிப்பாக, 20 ஆண்டுகளுக்கு மேலாக எங்களின் ஸ்ரீராமர் கோவில் கட்டும் ஆசையை, நிறைவேற்ற போகின்றனர். இந்த கோவில், தஷின் அயோத்தியா என்று பெயர் பெற்று அமைய போகிறது.
தேசிய எஸ்.சி., ஆணையத்தை தொடர்பு கொண்டு, உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு, 1.43 கோடி ரூபாய் வரை பெற்று தந்து உதவியதை, மறக்கவே முடியாது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE