திருப்பூர் : திருப்பூரில், அடிப்படை வசதி செய்து தர வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள், 53 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் மாநகராட்சி, 52வது வார்டு, வள்ளலார் நகர், லட்சுமி நகர், மூகாம்பிகை நகர், ஜெயலலிதா நகர், சபரி நகர் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. அப்பகுதியில், குப்பை தேக்கம், கழிவுநீர் அடைப்பு மற்றும் தெருவிளக்கு எரிவதில்லை, குடிநீர் சீராக வருவதில்லைஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அப்பகுதியினர் பலவஞ்சிபாளையம் பிரிவில் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.வீரபாண்டி போலீசார் பேச்சு நடத்தினர். கலைந்து செல்ல பொதுமக்கள் மறுத்தனர். இதனால், மறியலில் ஈடுபட்ட, 53 பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE