திருப்பூர் : புதிய வேளாண் சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி, மாநகர காங்., சார்பில் திருப்பூரில் ஏர் கலப்பை ஊர்வலம் நேற்று நடந்தது.
புதிய பஸ் ஸ்டாண்டில் துவங்கிய ஊர்வலத்தை மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் துவக்கி வைத்தார். இரண்டு பெண்கள் உட்பட, 150 பேர் பங்கேற்றனர். முன்னதாக புதிய வேளாண் மசோதாவால் ஏற்படும் பாதிப்பு குறித்து கட்சி நிர்வாகிகள் பேசினார். புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து பி.என்., ரோட்டில், ஏர் கலப்பையுடன் ஊர்வலம் செல்ல முயன்ற கட்சியினர், நுாறு பேரை போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE