திருப்பூர் : திருப்பூரில் இருவேறு இடங்களில் நடந்த சோதனையில், 31 கிலோ பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது; மூவர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர், கே.எஸ்.சி., ஸ்கூல் வீதியில், சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த வேனை தெற்கு போலீசார் சோதனையிட்டனர். அதில், 11 கிலோ பான்மசாலா விற்பனைக்கு கொண்டு செல்வது தெரிய வந்தது.இதனால், வேனை ஓட்டி வந்த கருவம்பாளையத்தை சேர்ந்த, காஜாராம், 26, வாலிபாளையம், கோபால், 29 ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, வேனை பறிமுதல் செய்தனர்.இதேபோல், வீரபாண்டி போலீசார் பூங்கா நகரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள ஒரு கடையில், 10 கிலோ பான்மசாலா பதுக்கி விற்பது வந்தது. பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர், அறிச்செல்வத்தை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE