திருப்பூர் : அடையாள அட்டைக்கு அலைக்கப்படுவதை கண்டித்து, மாற்றுத்திறனாளிகள் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. மாதம், 5,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். இலவச வீட்டுமனை பட்டா மற்றும் அடுக்குமாடி வீடு ஒதுக்க வேண்டும்.தனியார் நிறுவனங்களிலும், நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். உதவித்தொகை தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று போராட்டம் நடந்தது.தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தினர், கலெக்டர் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற, 100 பேரை போலீசார் கைது செய்து, மாலையில் விடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE