அனுப்பர்பாளையம் : கடையின் கூரையை பிரித்து, மொபைல் போன்களை திருடி சென்றவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கள் பீர்முகமது மற்றும் பிரேம்குமார், 25, இருவரும், மொபைல் போன் கடை வைத்துள்ளனர்.நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி சென்றனர். நள்ளிரவு இரவு மர்ம நபர்கள் கடை மேற்கூரையை பிரித்து, பத்து போன்கள், 20 ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை திருடி சென்றனர். பெருமாநல்லுார் போலீசார் வழக்கு பதிவு செய்து, திருடர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE