திருப்பூர் : ஈஸ்வரன் கோவில் முன்புறம் வடிகால் கட்ட திட்டமிட்டு பணி துவங்கியது. இதனால், அவ்வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர், காமராஜ் ரோட்டில் பூ மார்க்கெட் பகுதியிலிருந்து ஈஸ்வரன் கோவில் வீதியாக வடிகால் கட்டும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. இதன் தொடர்ச்சியாக ஈஸ்வரன் கோவில் முன், வடிகால் அமைத்து நொய்யல் ஆறு சென்று சேரும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:ஈஸ்வரன் கோவில் சுற்றுப்பகுதியில் மழை நாட்களில் அதிகளவில் சேகரமாகும் மழை நீர் முறையாக நொய்யலுக்கு செல்லும் வகையில், வடிகால் அமைத்து, நொய்யல் பாலம் வரை கான்கிரீட் தளமும் அமைக்கப்படவுள்ளது.
சோதனை அடிப்படையில் குழி தோண்டிய போது அங்கு மின்சார மற்றும் குடிநீர் குழாய்கள் இருந்தது. நாளை (இன்று) மின் வாரியம் உள்ளிட்ட உரிய அலுவலர்களுடன் ஆய்வு செய்து பணி தொடர்வது குறித்து முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE