சென்னை:தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மார்ச்சில் ஊரடங்கு அமலானது. அதற்கு முன்பே பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
நேரடி வகுப்புகள் நடக்காத நிலையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரிகள் திறக்கப் பட்டன. முதுநிலை இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் துவங்கின. கல்லுாரிகளுக்குள் மாணவர்கள் நுழையும் போது அவர்களின் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு சராசரி வெப்பநிலை உள்ளவர்கள் மட்டுமே கல்லுாரிக்குள் அனுமதிக்கப் பட்டனர்.அனைத்து மாணவர்களும் முக கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டது.
சானிடைசர்' வைக்கப்பட்டு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்பட்டது. வகுப்பறைகளில் சமூக இடைவெளியுடன் அமர இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE