மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் நடூர், கண்ணப்பன் லே---அவுட்டில், ஒரு வீட்டின் சுற்றுச்சுவர், கடந்த ஆண்டு டிச., 2ல் இடிந்து விழுந்து, 17 பேர் இறந்தனர்.
விபத்து நடந்து ஓராண்டு ஆனதை அடுத்து, பல்வேறு அமைப்பினர் அஞ்சலி ஊர்வலம் நடத்த இருந்தனர்; இதற்கு, போலீஸ் தடை விதித்தது.நடூரிலும், மேட்டுப்பாளையம் நகரிலும் கோவை ரூரல் எஸ்.பி., அருளரசுதலைமையில், இரு ஏ.டி.எஸ்.பி.,க்கள், ஆறு டி.எஸ்.பிக்கள் தலைமையில் 600 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம், சாலை மறியல் செய்த, 157 பேர் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE