பாலக்காடு:பாலக்காடு அருகே வியாபாரி கொலை வழக்கில், மூவர் கைது செய்யப்பட்டனர்.
கோவையைச் சேர்ந்தவர் மூர்த்தி 55; பாலக்காட்டில் பழைய இரும்பு பொருட்களை வாங்கும் வியாபாரம் செய்து வந்தார். இவர் கடந்த 24ம் தேதி, பாலக்காடு கஞ்சிக்கோடு தொழில்பேட்டை பகுதியில், இறந்த நிலையில் காணப்பட்டார். விசாரணையில் இவரை கொலை செய்தது, கஞ்சிக்கோட்டை சேர்ந்த மனோஜ் 23, கிரீஷ் குமார் 25, அபிஜித் 19, கோவையை சேர்ந்த கார்த்திக் என தெரியவந்தது.
கார்த்திக் தவிர, மூவரும் கைது செய்யப்பட்டனர்.போலீசார் கூறுகையில், 'சம்பவத்தன்று இரவு மது குடிப்பதற்காக, தொழில் நிறுவன கட்டடம் அருகே சென்றபோது, அங்கிருந்த மூர்த்தி கண்டித்துள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில், நால்வரும் கற்களை வீசி கொலை செய்துள்ளனர்' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE