புதுடில்லி : காற்றின் தரம் மேலும் மோசடைந்தால், நாட்டின் தலைநகர பகுதிகள் மட்டுமின்றி, அனைத்து நகரங்களிலும் பட்டாசுகளின் விற்பனை மற்றும் பயன்பாடு முழுமையாக தடை செய்யப்படும் என, தேசிய பசுமை தீர்ப்பாயம் கூறியுள்ளது.

பட்டாசுகளின் விற்பனை குறித்து, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல் வருமாறு:நாட்டில், காற்றின் தரம் மிதமாகவோ அல்லது மோசமாகவோ உள்ள நகரங்களில், பட்டாசுகளின் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டதுடன், இரண்டு மணி நேரம் மட்டும் பசுமை பட்டாசுகளை வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த உத்தரவு காலவரையறையின்றி நீட்டிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு இடையே, தேசிய தலைநகர பகுதிகள், பெரு மற்றும் சிறு நகரங்களில் காற்றின் தரம் மோசடையும் நிலையில், அனைத்து வகை பட்டாசுகளின் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு முழுமையாக தடை விதிக்கப்படும். கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களில், நள்ளிரவு, 11:55 முதல், 12:30 மணி வரை பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE