நடுவீரப்பட்டு; நடுவீரப்பட்டு அருகே பூட்டியிருந்த வீட்டில் திருட முயன்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.நடுவீரப்பட்டு அடுத்த நரியன்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் செங்கேணி,70; இவர் உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக திண்டிவனம் சென்றிருந்தார். செங்கேணி வீட்டில் இல்லாதது தெரிந்து நேற்று முன்தினம் அதிகாலை 5:00 மணிக்கு இரு மர்ம நபர்கள் திருட முயன்றனர். அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல், கூச்சல் போட்டார். இதனால் திருடர்கள் ஓட்டி வந்த பைக்குகளை சம்பவ இடத்திலேயே விட்டு தப்பியோடினர்.இது குறித்து செங்கேணியின் உறவினர் ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் பைக்கை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து திருடர்களை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE