கள்ளக்குறிச்சி; ஆலத்துார் ஏரியில் இருந்து செல்லும் உபரி நீர் சாலைகளில் வழிந்தோடுவதால் சாலை சேதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் கள்ளக்குறிச்சி அடுத்த ஆலத்துார் ஏரி நிரம்பி, அதன் உபரி நீர் வாய்க்கால் வழியாக அடுத்த ஏரிக்குச் செல்கிறது.புத்தந்துார், திருக்கனங்கூர் சாலையின் குறுக்கே உள்ள வரத்து வாய்க்காலில் தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது.இந்த தரைப்பாலம் மண் துார்ந்து சிறியதாகியுள்ளது.இதனால், ஏரியில் வெளியேறும் அதிகளவு உபரிநீர், தரைப்பாலம் மட்டுமின்றி சாலை வழியாகவும் வாய்க்காலில் சென்றடைகிறது. இதனால், வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.கனமழை பெய்து அதிகளவு நீர் வெளியேறினால் சாலை சேதமாகும் நிலை உள்ளது. எனவே, தரைப்பாலத்தை புதுப்பிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE