திருக்கோவிலுார்; டில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருக்கோவிலுாரில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.இந்திய கம்யூ., கட்சி, தமிழ்நாடு விவசாய சங்கங்கள் சார்பில் வேளாண் விரோத சட்டங்களையும், மின்சார சட்டம் 2020 திரும்பப் பெற வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்கோவிலுாரில் மறியல் போராட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்டத் தலைவர்கள் ராஜவேல், ஹரி, சிவக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்ட 25 பேரை கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE