புதுச்சேரி; மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி புதுச்சேரி விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
சுதேசி மில் எதிரில் நடந்த போராட்டத்திற்கு சிறப்பு தலைவர் மாசிலாமணி, தலைவர் கீதநாதன், பொதுச்செயலர் ரவி ஆகியோர் தலைமை தாங்கினர்.இந்திய கம்யூ., மாநில செயலர் சலீம், ஏ.ஐ.டி.யூ.சி., பொதுச்செயலர் சேதுசெல்வம் கண்டன உரையாற்றினர்.போராட்டத்தில் துணை பொதுச்செயலர் ராஜா, பொருளாளர் கலியமூர்த்தி, செயலர் பெருமாள், துணை தலைவர் ராமச்சந்திரன், பாகூர் தாலுகா செயலர் தாமோதரன், மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆறுமுகம், நாராயணன், முருகையன் உள்பட பலர் கலந்து கொண்டனர்போராட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான வேளாண் சட்டங்களை திரும்ப பெறுவதோடு,டில்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோஷம் எழுப்பப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE