சங்கராபுரம்; சங்கராபுரத்தில் சிறுமி கடத்தப்பட்ட வழக்கில் வாலிபரை போலீசார், 'போக்சோ'வில் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி காலனியைச் சேர்ந்தவர் கேசவலு மகன் சுரேஷ், 21; இவர், சங்கராபுரத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த வாரம் கடத்திச் சென்றார்.புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து, திருப்பூரில் பதுங்கியிருந்த சுரேைஷ பிடித்து, சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.தொடர்ந்து சுரேஷ் மீது 'போக்சோ' பிரிவில் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE