திண்டிவனம்; திண்டிவனத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி டில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது நடந்த தாக்குதலை கண்டித்து, திண்டிவனம் தலைமை தபால் நிலையம் எதிரில் நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திண்டிவனம், மயிலம், மரக்காணம் வட்டக்குழுக்கள் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஏழுமலை, வட்டத்தலைவர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், பார்கவுன்சில் உறுப்பினர் கோதண்டம், மாநில குழு உறுப்பினர் தாண்டவராயன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் கமலக்கண்ணன், தமிழரசன், சுந்தர், செல்வராசு, ரமேஷ், குமார், உலகநாதன், மனோகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE