கள்ளக்குறிச்சி; தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் மகாசபை, மக்கள் அதிகாரம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.கச்சேரி சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் மணி தலைமை தாங்கினார். ரகுராமன், ஆறுமுகம், கலியமூர்த்தி, சின்னசாமி, ராமலிங்கம் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், டில்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ., அரசை கண்டிப்பது. அத்திய பொருட்கள் திருத்தச் சட்டம், வேளாண் விளை பொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம், விவசாயிகள் விலை உத்தரவாதம், ஒப்பந்தம் மற்றும் பண்ணை சேவை அவசர சட்டம், விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திருத்த சட்ட மசோதா ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE