செங்கல்பட்டு; செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், உலக எய்ட்ஸ் தினத்தையொட்டி, எய்ட்ஸ் விழிப்புணர்வு கருத்தரங்கம், மருத்துவமனை வளாகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.மருத்துவமனை முதல்வர் சாந்திமலர் தலைமையில், வருவாய் கோட்டாட்சியர் செல்வம், மருத்துவ கண்காணிப்பாளர் ஹரிஹரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், கட்டுரை, கோலம் மற்றும் பேச்சுப் போட்டி நடந்தது.இதில், வெற்றி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினர். இந்த கருத்தரங்கில், அரசு மருத்துவக் கல்லுாரியைச் சேர்ந்த, டாக்டர்கள், முதுகலை டாக்டர்கள், செவிலியர் மாணவியர், பொதுமக்கள் ஆகியோர் பங்கேற்றனர். அதன்பின், எய்ட்ஸ் இல்லா இந்தியாவை உருவாக்க, அனைவரும் உறுமொழி எடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE