காஞ்சிபுரம்; மூன்று அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, காஞ்சிபுரம் மற்றும் திருப்போரூரில், சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை, போலீசார் கைது செய்தனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையாக, 3,000 ரூபாயும், கடும் ஊனமுற்றோருக்கு, 5,000 ரூபாயும் உயர்த்தி வழங்க வேண்டும்.தனியார் துறையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க, சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும்.அரசுத்துறைகளில், காலிப்பணியிடங்களை கண்டறிந்து, மூன்று மாதங்களில் நிரப்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு சங்கம் சார்பில், சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது.இதில் ஈடுபட்ட, காஞ்சிபுரத்தில், 100 பேர், திருப்போரூரில், 350 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் திருமண மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர்; மாலை, விடுவிக்கப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE