மதுராந்தகம்; மதுராந்தகம் அருகே, சோறு வடித்த கஞ்சியை, உடல் மீது ஊற்றிக்கொண்டதில், இரண்டரை வயது குழந்தை பலியானது.மதுராந்தகம் அடுத்த, முருங்கை கிராமத்தைச் சேர்ந்த பொன்னன்- - ரேவதி தம்பதியின் இரண்டரை வயது ஆண் குழந்தை பரணி.நேற்று முன்தினம் இரவு, பரணியின் தாய் ரேவதி, வீட்டு சமையலறையில், பாத்திரத்தில் சோறு வடித்து விட்டுள்ளார்.அப்போது, வீட்டிற்குள் விளையாடிக்கொண்டிருந்த குழந்தை, சோறு வடித்த கஞ்சி தண்ணீரை, தன் மீது தள்ளியது. இதில், முகம், உடல் பகுதிகளில் குழந்தை பரணிக்கு தீக்காயம் ஏற்பட்டது.சென்னை ராஜுவ் அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தை, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது. ஒரத்தி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE