மும்பை: மஹாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில், நிழலுலக தாதா தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான, 3 சொத்துக்கள், ரூ.1.10 கோடிக்கு ஏலம் விடப்பட்டது.
மும்பை குண்டுவெடிப்பு முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராஹிம் தலைமறைவான நிலையில், ரத்னகிரி மாவட்டம் கேட் தாலுகாவில் உள்ள, அவருக்கு சொந்தமான காலி மனைகள் மற்றும் வீடு ஆகியவை ஏலம் விடப்பட்டன.

கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்த சொத்துகளை ஏலம் விடும் சட்டத்தின் கீழ், இதற்கான ஆணையம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில், தாவூதுக்கு சொந்தமான, 1.09 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள், 1.10 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE