வடமதுரை : 'நீர் நிலைகளை பயன்படுத்தும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என, வடமதுரை சுகாதார மேற்பார்வையாளர் டி.ஆர்.முத்துகுமாரசாமி கேட்டு கொண்டுள்ளார்.
பருவமழையால் ஆங்காங்கே கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர் தேங்கியுள்ளது. குழந்தைகள், சிறுவர்களை நீர்நிலைகளுக்குச் செல்ல அனுமதிக்கக் கூடாது. மழைக்காலங்களில் குளோரின் கலந்த குடிநீரை, காய்ச்சிய பிறகே பயன்படுத்த வேண்டும். அசுத்தமான நீர்நிலைப் பகுதி நீரை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.மழை நீரின் மூலம் கொசுக்கள் எளிதில் உற்பத்தியாகி டெங்கு மற்றும் தொற்றுத் நோய்கள் பரவ வாய்ப்புள்ளதால், வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்க்க வேண்டும். காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறவும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE