திண்டுக்கல் : திண்டுக்கல் நாகல்நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க புதிதாக அமைக்கப்பட்டுள்ள தானியங்கி சிக்னல்களை டி.ஐ.ஜி., முத்துசாமி, எஸ்.பி.,ரவளிப்பிரியா திறந்து வைத்தனர்.
நகரில் போக்குவரத்து அதிகமுள்ள பகுதிகளில் சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகிறது. நத்தம் மேம்பாலம் முன்பு உள்ள நாகல்நகர் ரவுண்டானா பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இங்கு 6 சாலைகள் சந்திக்கும் இடம் என்பதால் நெரிசலும் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க இச்சாலைகளில் தானியங்கி சிக்னல்கள் பொருத்த எஸ்.பி.ரவளிபிரியா உத்தரவிட்டார். அதன்படி அமைக்கப்பட்ட சிக்னல்களை நேற்று டி.ஐ.ஜி., முத்துச்சாமி திறந்து வைத்தார். எஸ்.பி., ரவளிபிரியா, மாநகராட்சி கமிஷனர் பாலசுப்பிரமணியம், இன்ஸ்பெக்டர் பிரகாஷ்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE