திண்டுக்கல் : திண்டுக்கல்லில் மனநல திட்டம் சார்பில் அரசு அலுவலர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.
மத்திய அரசு சார்பில் மனநல குறைபாடு உடையவர்களை கண்டறியவும், அதை தடுக்கவும் மனநல மருத்துவ திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மாவட்ட மனநல திட்டம் செயல்படுத்தப்படுகிறது.நேற்று அரசு மனநல மருத்துவர் டீன் வெஸ்லி, ' மன அழுத்தத்தால் ஏற்படும் பாதிப்புகள், அதில் இருந்து விடுபடும் வழிமுறைகள்' குறித்து ஆலோசனை வழங்கினார். மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சி குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. முதற்கட்டமாக 30 அலுவலர்களுக்கும், தொடர்ந்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE