புதுடில்லி : டாடா குழுமம், ஆன்லைன் மளிகை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும், 'பிக் பாஸ்கெட்' நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில் இறங்கி உள்ளது.

நாட்டின் மின்னணு மளிகை வர்த்தக பிரிவில், 50 சதவீத பங்களிப்புடன் உள்ளது, பிக் பாஸ்கெட். 1,000 பிராண்டுகளில், கிட்டத்தட்ட, 18 ஆயிரம் வகையான பொருட்களை இந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. பிக்பாஸ்கெட்டில், அலிபாபா உள்ளிட்ட பல நிறுவனங்கள்முதலீடு செய்துள்ளன. இந்நிலையில், இந்நிறுவனத்தின், 80 சதவீத பங்குகளை கையகப்படுத்தும் முயற்சியில், டாடா குழுமம் இறங்கி உள்ளது.

கிட்டத்தட்ட, 9,620 கோடி ரூபாய் செலவில் பங்குகளை வாங்க இருப்பதாக தெரிய வந்து உள்ளது. டாடா குழுமம், காரிலிருந்து கத்தரிக்காய் வரை அனைத்து வகையான பொருட்களையும் வாங்கும் வகையில், 'சூப்பர் ஆப்' எனும், மெகா செயலியை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறது. இதன் காரணமாகவே, பிக்பாஸ்கெட் நிறுவனத்தை கையகப்படுத்தும் முயற்சியில், டாடா இறங்கி உள்ளதாக தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE