கோபி: டில்லியில் விவசாயிகளை தாக்கியதை கண்டித்தும், அவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், கோபியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோபி ஒன்றிய செயலாளர் காசிகனகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பரமேஸ்வரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் துளசிமணி, மாவட்ட துணை தலைவர் பழனிசாமி, ஒன்றிய செயலாளர் கோபாலன் ஆகியோர் பங்கேற்றனர்.
* இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், பவானியில் நகர செயலாளர் பாலமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசு உடனடியாக வேளாண்மை சட்டங்கள்-2020ஐ, திரும்ப பெற வேண்டும் என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE