மொடக்குறிச்சி: மாத உதவித்தொகையாக குறைந்தபட்சம், 5,000 ரூபாயாக உயர்த்தி வழங்கவேண்டும் எனக்கூறி, மொடக்குறிச்சி தாலுகா அலுவலகம் முன், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் சட்டப்படியான நான்கு மணி நேரம் வேலை, முழுநேர ஊதியம் வழங்கவேண்டும். வேலை நாட்களை, 200 நாட்களாக உயர்த்தி வழங்கவேண்டும். ஐந்து சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். மாத உதவித்தொகை, 5,000 ரூபாய் வழங்கவேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மொடக்குறிச்சி வட்டார தாலுகா செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
* அந்தியூர் தாலுகா அலுவலகம் முன், நடந்த மறியல் போராட்டத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில், மாத உதவித்தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும் அரசு, தனியார் துறைகளில் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, 5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE