ஆத்தூர்: ஆத்தூர் நகர் வழியாக செல்லும், சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையின் மூன்று முனை சந்திப்பில், எம்.ஜி.ஆர்., சிலை உள்ளது. அதன் பீடத்தின் மூன்று புறமும், காங்., சார்பில், நேற்று, மத்திய அரசை கண்டித்து நடந்த, ஏர் கலப்பை ஊர்வலம் குறித்த சுவரொட்டி ஒட்டியுள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து, அ.தி.மு.க., நகர செயலர் மோகன் கூறுகையில், ''எம்.ஜி.ஆர்., சிலை பீடம் என தெரிந்தே, தி.மு.க., - காங்., கட்சியினர் மலிவான அரசியல் செய்ய, சுவரொட்டி ஒட்டுகின்றனர். எம்.ஜி.ஆர்., மீது பாசமாக உள்ள தி.மு.க., - காங்., கட்சியினர், அ.தி.மு.க.,வில் இணையலாம். இதுகுறித்து, ஆத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE