மொரப்பூர்: மொரப்பூர் அருகே, அ.தி.மு.க., கிளை செயலாளரை தாக்கிய, அ.ம.மு.க.,வை சேர்ந்த மாஜி எம்.எல்.ஏ., முருகன் உள்ளிட்ட, எட்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த தம்பிச்செட்டிபட்டியை சேர்ந்தவர் ஆறுமுகம், 62, அ.தி.மு.க., கிளை செயலாளர்; நேற்று காலை, 11:30 மணிக்கு, அங்குள்ள ஜூஸ் பேக்டரி சுற்றுச்சுவரில், அ.ம.மு.க.,வினர் சுவர் விளம்பரம் எழுதிக் கொண்டிருந்தனர். அங்கு சென்ற ஆறுமுகம், தாங்கள் விளம்பரம் எழுதும் சுவற்றின் மேல், நீங்கள் ஏன் எழுதுகிறீர்கள் என கேட்டுள்ளார். அங்கு, வந்த ஜூஸ் பேக்டரி உரிமையாளர் இளவரசன், இருதரப்பினரையும் அழைத்து, யாரும் சுவர் விளம்பரம் செய்ய வேண்டாம் என, கூறியுள்ளார். இந்நிலையில், ஆறுமுகம் வீட்டிற்கு, அ.ம.மு.க., அமைப்பு செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான முருகன், முன்னாள் சேர்மன் தென்னரசு, ஏகநாதன், சிற்றரசு, செல்வம், கமல், நரசிம்மன், கனகராஜ் மற்றும் அடையாளம் தெரியாத நபர்கள் சென்றுள்ளனர். ஆறுமுகத்தை, முருகன், கனகராஜ் இருவரும் ஆபாச வார்த்தையால் பேசி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து ஆறுமுகம் புகாரின்படி, மொரப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து, முருகன், கனகராஜ் உள்ளிட்ட, எட்டு பேரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE