அந்தியூர்: தாய் மாமன் துக்க நிகழ்வில், தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்றார்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்தை சேர்ந்தவர் கருப்பகவுண்டர், 98.இவர் தமிழக முதல்வரின் தாயார் தவுசாயம்மாளின், உடன் பிறந்த சகோதரர். முதல்வர் பழனிசாமி தாய் மாமனும், அந்தியூர் முன்னாள் ஒன்றிய செயலாளர், கே.பி.எஸ்.,ராஜாவின் தந்தையுமான கருப்பகவுண்டர், வயது முதிர்ச்சி காரணமாக கடந்த, 30ல், இறந்தார். இதையடுத்து, துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக, நேற்று காலை முதல்வர் பழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்து, பின்னர் சாலை மார்க்கமாக, அந்தியூர் அருகே மைக்கேல்பாளையத்திற்கு காலை, 9:42 மணிக்கு வந்தார். தாய்மாமா வீட்டில், துக்கம் விசாரித்து குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர், அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன், மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் அந்தியூர் எம்.எல்.ஏ.,ராஜா ஆகியோர், முதல்வரின் உறவினர் துக்க நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும், பல மாவட்டங்களில் இருந்து, அ.தி.மு.க., நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை முடித்து கொண்டு, 11:08 மணியளவில் அங்கிருந்து முதல்வர் பழனிசாமி சேலம் புறப்பட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE