புதுடில்லி: உ.பி., மாநிலம் ஹத்ராசில், 19 வயது தலித் பெண், உயர் ஜாதியினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, தாக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் உயிரிழந்தார். அந்தப் பெண்ணின் உடலை, போலீசார் இரவோடு இரவாக, தகனம் செய்தது, சர்ச்சையை தீவிரமாக்கியது.,இது பற்றி, சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டதை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், இது பற்றி, உத்தர பிரதேச அரசிடம் தான் கோரிக்கை விடுக்க வேண்டும்' என, கூறியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE