கரூர்: கரூரில் பசுபதீஸ்வரர் கோவிலில், குடமுழுக்கு விழாவை, தமிழ் மொழியில் நடத்த கோரி உண்ணாவிரதம் இருந்த, 29 பேரை போலீசார் கைது செய்தனர். கரூர் நகரில் பிரசித்தி பெற்ற, கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் நாளை குடமுழுக்கு நடக்கிறது. அதில், தஞ்சாவூர் பெருவுடையார் கோவிலில் தமிழ் மொழியில், குடமுழுக்கு விழா நடந்தது போல, நடத்த வேண்டும் என, பல்வேறு அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இதை வலியுறுத்தி, பல்வேறு அமைப்பினர், நேற்று காலை, 10:00 மணிக்கு பசுபதீஸ்வரர் கோவில் முன்பு, உண்ணாவிரத போராட்டத்தை துவக்கினர். ஆனால், அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக, நான்கு பெண்கள் உள்பட, 29 பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE