குளித்தலை: மேட்டுமருதூர் ஆரம்ப துணை சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. குளித்தலை அடுத்த, மருதூர் டவுன் பஞ்., பணிக்கம்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தின் கீழ், மேட்டுமருதூர், 5வது வார்டு அங்காளம்மன் கோவில் அருகில் ஆரம்ப துணை சுகாதார மையம் மற்றும் கிராம செவிலியர் குடியிருப்பு கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. துணை சுகாதார மையத்தினைச் சுற்றிலும் தனிநபர் ஆக்கிரமிப்பு மற்றும் முற்செடிகள் வளர்ந்து வருகின்றன. மேலும், கட்டடத்தில் உள்ள ஜன்னலில் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு சேதமடைந்துள்ளன. கட்டடத்தினை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பு மற்றும் முற்செடிகளை அகற்றவும், துணை சுகாதார மையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE