கரூர்: கரூர் - திருச்சி புறவழிச்சாலையில், பிற சாலைகளுடன் இணையும் பகுதி சுக்காலியூர் ரவுண்டானா சந்திப்பின் பகுதியின் வழியாக பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் சென்று வருகின்றன. கிராம பகுதிகளுக்கு செல்ல டவுன் பஸ்களும் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சுக்காலியூர் அருகே நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அது, சேதமடைந்து விட்டதால், பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. வெயில், மழையில் பயணிகள் காத்திருக்கின்றனர். முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சந்திப்பு பகுதியில் பயணிகள் நலன் கருதி, நிழற்கூடத்தை புதுப்பிக்க அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE