நாமக்கல்: நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், செஞ்சுருள் சங்கம் சார்பில், எச்.ஐ.வி.,- எய்ட்ஸ் நோய் குறித்து இணையவழி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் முருகன் விழிப்புணர்வு நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சேலம், கோனேரிப்பட்டி, அரசு மேம்படுத்தப்பட்ட முதன்மை சுகாதார மைய மருத்துவ அலுவலர் சூரியபிரகாஷ் பங்கேற்று, எச்.ஐ.வி., விழிப்புணர்வு, தொற்று உள்ளோருக்கு கொரோனாவினால் ஏற்படும் விளைவு; உலகளாவிய ஒற்றுமை மற்றும் பொறுப்புகளை பகிர்ந்து கொள்வது; எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரவணைப்பும் ஆதரவும் மிகவும் அவசியம் என, பேசினார். கல்லூரிச் செஞ்சுருள் சங்கத் திட்ட அலுவலர் சந்திரசேகரன், தாவரவியல் துறை உதவிப் பேராசிரியர் பாலகிருஷ்ணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE