பள்ளிபாளையம்: கீழ்காலனி பகுதியில், சோதனைச் சாவடி மையம் அமைக்க, கோரிக்கை எழுந்துள்ளது. பள்ளிபாளையம் அருகே கீழ்காலனியில் நான்கு பிரிவு சாலைகள் செல்கின்றன. மேலும், பிரதான மேம்பாலம் செல்கிறது. இதனால் வாகனங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும். இரவு நேரத்தில் வெளிப் பகுதியிலிருந்து பலர் மது அருந்தி வருகின்றனர். நள்ளிரவு நேரத்திலும் கும்பலாக பலர் சுற்றி வருகின்றனர். குடிமகன்கள், மர்மநபர்கள் நடமாட்டம் இங்கு அதிகரித்துள்ளது. பெண்கள் இந்த வழியாக செல்லவே அச்சமடைகின்றனர். குடியிருப்புகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், மக்கள் எந்நேரமும் வந்து செல்கின்றனர். எனவே, இங்கு வாகன சோதனைச் சாவடி அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE