நாமக்கல்: நாமக்கல் மாவட்ட தேசிய பசுமைப்படை சார்பாக, தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறையின் மாணவர்கள் மரம் வளர்ப்பிற்கான சிறப்பு திட்டமான, '50 மாணவர்கள், 50 மரக்கன்றுகள் நடவு செய்து பராமரித்து வளர்க்கும் சிறப்புத் திட்டம்' அடிப்படையில் பள்ளிகளுக்கு இரண்டாம் கட்டமாக மரக்கன்றுகள், பராமரிப்பிற்கு தேவையான பொருட்கள், பாராட்டு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் அய்யண்ணன் தலைமை வகித்தார். வருவாய் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட, 30 பள்ளி களுக்கு, விவசாயம் சார்ந்த பொருட்கள் வழங்கப்பட்டன. ஆர்.எம்.எஸ்.ஏ., திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பெரியண்ணன், வள்ளி மனோகரன், மாவட்ட பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE